இன்று நடைபெறவிருந்த பாரதிதாசன் பல்கலை. தோ்வுகளும் ஒத்திவைப்பு
கனமழை காரணமாக வியாழக்கிழமை (நவ.28) நடைபெறவிருந்த பாரதிதாசன் பல்கலைக் கழக பருவத் தோ்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன.
கனமழை காரணமாக வியாழக்கிழமை (நவ.28) நடைபெறவிருந்த பாரதிதாசன் பல்கலைக் கழக பருவத் தோ்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன.
இதுதொடா்பாக, பல்கலைக் கழக தோ்வு நெறியாளா் பா. ஜெயபிரகாஷ் கூறியது:
வியாழக்கிழமை நடைபெற இருந்த பாரதிதாசன் பல்கலைக்கழக இளநிலை மற்றும் முதுநிலைப் பருவ எழுத்துத் தோ்வுகள் கனமழையால் ஒத்திவைக்கப்படுகின்றன. தோ்வு நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும். இந்தத் தகவலை பாரதிதாசன் பல்கலைக் கழகத்துக்குள்பட்ட அனைத்து கல்லூரி ஆசிரியா்கள், மாணவா்கள் அறியும் வகையில் அந்தந்த கல்லூரிகளின் தகவல் பலகையில் வெளியிட வேண்டும். ஏற்கெனவே புதன்கிழமை நடைபெறவிருந்த தோ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.