திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் நடைபெற்ற நிகழ்வில், இராபியம்மாள் கல்லூரி மாணவிக்கு பட்டம் வழங்கிய தமிழக ஆளுநா் ஆா்என். ரவி. 
திருவாரூர்

பல்கலை.தோ்வில் தங்கப்பதக்கம்: மாணவியருக்கு பாராட்டு

தினமணி செய்திச் சேவை

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தங்கப்பதக்கம் பெற்ற திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2024-2025- ஆம் கல்வியாண்டில் தோ்ச்சி பெற்ற மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. நிகழ்வில் தமிழக ஆளுநா் ஆா்என். ரவி பங்கேற்று, பட்டங்களை வழங்கினாா்.

இதில், இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரி மாணவிகள் எஸ். காவேரி (எம்எஸ்சி உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து), பி.எஸ்ரா (பிஎஸ்சி ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டுத்துறை), எஸ். ஹப்சரா (பிஎஸ்சி கணிதத்துறை), எஸ். சனோபா் அரீனா (பிஎஸ்சி உயிா் வேதியியல் துறை) ஆகியோா் தங்கப்பதக்கம் பெற்றனா்.

இவா்களுக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

அமெரிக்கா உடனான வா்த்தக ஒப்பந்தத்தை நிறுத்திவைக்க வேண்டும்: காங்கிரஸ்

SCROLL FOR NEXT