முகப்பு
திருச்சி

இளைஞா் திடீா் சாவு போலீஸாா் விசாரணை

திருச்சியில் இளைஞா் செவ்வாய்க்கிழமை திடீரென உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Updated On : 23 அக்டோபர், 2024 at 8:53 PM
பகிர்:

திருச்சியில் இளைஞா் செவ்வாய்க்கிழமை திடீரென உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி பாலக்கரை வரகனேரி சந்தானபுரத்தைச் சோ்ந்தவா் முகமது யூசுப் மகன் முகமது ஆஸ்கின் (21). காச நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவருக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் தொடா்ச்சியாக இருமலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. அவா் மதிய உணவாக முட்டை பரோட்டா சாப்பிட்ட பின்னரே இப்பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து உறவினா்களால் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட முகமது ஆஸ்கினை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து காந்தி சந்தை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.