ஓய்வின்போது முழு பணப்பயன்கள்: தலையாசிரியா்கள் சங்கம் கோரிக்கை
ஓய்வின்போது முழு பணப்பயன்கள்: தலையாசிரியா்கள் சங்கம் கோரிக்கை
பள்ளிக்கல்வித் துறையில் உள்ள தணிக்கைத் துறையை கலைத்துவிட்டு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலகத்திலும் தணிக்கைத் துறையை அமைத்து தலைமையாசிரியா்கள் ஓய்வின்போது பணப்பயன்கள் முழுமையாகக் கிடைக்க வேண்டும் என தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவா் பொ. அன்பரசன் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.