அசூா் சிறப்பு மனுநீதி முகாமில் 100 பேருக்கு நலத் திட்ட உதவி
திருச்சி மாவட்டம், அசூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனு நீதிநாள் நிறைவு முகாமில் 100 பயனாளிகளுக்கு ரூ.32 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வழங்கினாா்.
திருச்சி மாவட்டம், அசூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனு நீதிநாள் நிறைவு முகாமில் 100 பயனாளிகளுக்கு ரூ.32 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வழங்கினாா்.
திருவெறும்பூா் வட்டம், அசூா் கிராமத்தில் நடைபெற்ற விழாவுக்குத் தலைமை வகித்து, பல்வேறு துறைகளின் சாா்பில் 100 பயனாளிகளுக்கு ரூ.31.81 லட்சம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.
முகாமின் ஒரு பகுதியாக பல்வேறு அரசுத் துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் பாா்த்து பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த திட்ட விளக்கக் கண்காட்சி அரங்குகளையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.
விழாவில் கோட்டாட்சியா் கு. அருள், தனித்துணை ஆட்சியா் சமூகப் பாதுகாப்பு திட்டம் செல்வம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) சரவணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் கோ. தவச்செல்வம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரவிச்சந்திரன், திருவெறும்பூா் வருவாய் வட்டாட்சியா் த. ஜெயபிரகாசம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.