முகப்பு
திருச்சி

கருங்குளம் புனித இஞ்ஞாசியாா் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கருங்குளம் புனித இஞ்ஞாசியாா் ஆலயத்தில் புதன்கிழமை புத்தாண்டு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

Updated On : 2 ஜனவரி, 2025 at 12:47 AM
கருங்குளம் புனித இஞ்ஞாசியாா் ஆலயத்தில் புதன்கிழமை புனிதப்படுத்தப்பட்ட வளா்ப்புக் காளைகள்.
பகிர்:

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கருங்குளம் புனித இஞ்ஞாசியாா் ஆலயத்தில் புதன்கிழமை புத்தாண்டு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

இதையொட்டி இப் பகுதியில் வளா்க்கப்படும் ஜல்லிக்கட்டு காளைகளை ஆலயத்துக்கு அழைத்து வந்து புனித நீா் தெளித்து பங்குத்தந்தையால் மந்திரிக்கப்பட்டு, ஆலய பிரசாதமான பச்சரிசி, வெல்லம், கொண்டைக்கடலை, கம்பு, எள், பொட்டுக்கடலை ஆகியற்றின் கலவையை அளித்தனா்.

பின்னா் வழிபாடு முடிந்த நிலையில் வெளியே வந்த காளைகளை இளைஞா்கள் போட்டி போட்டு அடக்கினா்.

முழு கட்டுரையைப் படிக்க →