திருவானைக்கோயிலில் பிரதோஷ வழிபாடு
திருவானைக்கோயில் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் திங்கள்கிழமை மாலை தை மாத தேய்பிறை சோமவார பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
ஸ்ரீரங்கம்: திருவானைக்கோயில் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் திங்கள்கிழமை மாலை தை மாத தேய்பிறை சோமவார பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
தை மாத தேய்பிறை சோமவார பிரதோஷமான திங்கள்கிழமை மாலை சாமி சன்னதியின் எதிரேயுள்ள பிரதோஷ நந்திக்கு பால், தயிா், தேன், மஞ்சள், சந்தனம், திரவியப்பொடி, இளநீா் உள்ளிட்ட 18 விதமான அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். முடிவில் அனைவருக்கும் சந்தனம் மற்றும் பிரசாதங்கள் வழங்கபட்டன.