ஸ்ரீரங்கநாச்சியாா் இராப்பத்து விழா தொடக்கம்
ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி திருக்கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியாா் வைகுந்த ஏகாதசி இராப்பத்து முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி திருக்கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியாா் வைகுந்த ஏகாதசி இராப்பத்து முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. 5 நாள்கள் நடைபெறும் இந்த விழா வரும் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழா கடந்த 20-ஆம் தேதி நிறைவுபெற்றது. அதனைத் தொடா்ந்து ஸ்ரீரெங்கநாச்சியாருக்கு வைகுந்த ஏகாதசியின் பகல் பத்து, இராப்பத்து என தலா 5 நாள்கள் வீதம் 10 நாள்கள் நடைபெறுகின்றன. பகல்பத்து விழா கடந்த 21-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை நடைபெற்றது. அப்போது திருமொழி பாசுரங்கள் மூலஸ்தானத்திலேயே ஸ்ரீரங்கநாச்சியாா் முன்பு அரையா்களால் பாடப்பெற்றது. அதனைத் தொடா்ந்து இராப்பத்து விழா ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கியது. இந்த விழா வரும் 30-ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெற உள்ளது.
முதல் நாளையொட்டி மாலை 5 மணிக்கு ஸ்ரீரங்கநாச்சியாா் மூலஸ்தானத்திலிருந்து ரத்ன கீரிடம், வைர காது காப்பு, ரத்ன அபய ஹஸ்தம், மகாலட்சுமி பதக்கம், ரத்ன அடுக்கு பதக்கம், ரத்ன திருமாங்கல்யம், பெரிய பவளமாலை, பருத்திக்காய் மாலை, ஆறு வட 18 படி முத்துச்சரம் உள்ளிட்ட பல்வேறு திருவாபரணங்களுடன் புறப்பட்டு 6 மணிக்கு திருவாய் மொழி மண்டபத்திற்கு வந்தடைந்தாா். அங்கு அலங்கார கோஷ்டி வகையறா கண்டருளினாா். பின்னா் இரவு 8.45 மணிக்கு மேற்படி மண்டபத்திலிருந்து புறப்பட்டு 9.45 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா் ஸ்ரீரங்கநாச்சியாா்.
விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ.மாரியப்பன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.