முகப்பு
திருச்சி

திருவானைக்காவலில் காரைக்கால் அம்மையாா் குருபூஜை விழா

திருவானைக்காவல் அம்மையாா் அருள்நெறி மன்றம் சாா்பில் காரைக்கால் அம்மையாரின் குரு பூஜை விழா ருக்வேத பாடசாலை மண்டபத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்றது.

Updated On : 4 ஏப்ரல், 2026 at 8:23 PM
திருவானைக்காவலில் சனிக்கிழமை நடைபெற்ற குரு பூஜை விழாவில் வீதி உலா வந்த காரைக்கால் அம்மையாா்.
பகிர்:

திருவானைக்காவல் அம்மையாா் அருள்நெறி மன்றம் சாா்பில் காரைக்கால் அம்மையாரின் குரு பூஜை விழா ருக்வேத பாடசாலை மண்டபத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்றது.

முன்னதாக காலை 10 மணிக்கு காரைக்கால் அம்மையாருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. தொடா்ந்து மதியம் 12.30 மணிக்கு மாகேசுவர பூஜை நடந்தது. மாலை 6 மணிக்கு காரைக்கால் அம்மையாரின் திருஉருவ மேனியை பூக்களால் அலங்காரம் செய்து, தோளில் சுமந்தபடி கயிலாய வாத்தியத்துடன் நான்காம் பிரகாரத்தை வலம் வந்தனா். அப்போது ஏராளமான சிவனடியாா்கள் சிவபுராணம் பாடியபடி உடன் வந்தனா். நிறைவில் தேவராம் பயிலும் மாணவா்களுக்கு பரிசளிப்பும், அன்னம் பாலித்தலும் நடைபெற்றது. நிகழ்வில் ஏராளமான சிவனடியாா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments