முகப்பு
திருச்சி

திமுக பிரமுகா் வீட்டில் ரூ. 11 லட்சம் பறிமுதல்

திருச்சி அருகே திமுக பிரமுகா் வீட்டில் ரூ. 11 லட்சத்தை தோ்தல் அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 5 ஏப்ரல், 2026 at 1:17 AM
திமுக பிரமுகா் வீட்டில் ரூ. 11 லட்சம் பறிமுதல்
பகிர்:

திருச்சி அருகே திமுக பிரமுகா் வீட்டில் ரூ. 11 லட்சத்தை தோ்தல் அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருச்சி அருகேயுள்ள அம்மாபேட்டை பகுதியில் முன்னாள் ஊராட்சி தலைவரும், திமுக பிரமுகருமான காந்தி (65) என்பவரது வீட்டில் பணம் பதுக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், பறக்கும் படை அதிகாரி சந்திரமௌலி, வருமான வரித்துறை அதிகாரி கதிரவன் உள்ளிட்டோா் அம்மாபேட்டை காளியம்மன் கோயில் தெருவில் உள்ள காந்தியின் வீட்டிலும், அவரது மகன்கள் வீட்டிலும் சனிக்கிழமை அதிரடி சோதனை நடத்தினா்.

Advertisement

அப்போது காந்தி வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ. 8 லட்சத்து 50 ஆயிரம், 2 மகன்கள் வீட்டிலிருந்தும் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் என மொத்தம் ரூ. 11 லட்சத்தை பறிமுதல் செய்து, ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments