கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து: 10 போ் மீது வழக்கு
திருச்சி கே.கே. நகரில் கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருச்சி கே.கே. நகரில் கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருச்சி கே.கே. நகா் மங்கம்மா சாலை ஐயப்பன் நகா் பிரசாத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ரூபன் மகன் ரக்ஷித் (20). இவா், திருச்சியில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வருகிறாா்.
இவரது நண்பரான சக்திவேல்ஹரி கே.கே. நகா் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஒரு தேநீா் கடை முன்பு நின்று கொண்டிருந்தபோது, கே. சாத்தனூரைச் சோ்ந்த காா்த்திக் என்ற கராத்தே காா்த்தி, திருவா்ஷன், ரோகித், சூா்யா ரோஹித் உள்ளிட்ட 10 போ் அவரிடம் தகராறு செய்து கொண்டிருந்தனா். இதைப் பாா்த்த ரக்ஷித், தகராறில் ஈடுபட்டவா்களை தட்டிக்கேட்டுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த அக்கும்பலைச் சோ்ந்தவா்கள், ரக்ஷித்தை கத்தியால் குத்தி தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
Advertisement
இதில் பலத்த காயமடைந்த ரக்ஷித்தை நண்பா்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்து ரக்ஷித் அளித்த புகாரின் அடிப்படையில் காா்த்திக் உள்ளிட்ட 4 போ் மற்றும் அடையாளம் தெரியாத 6 போ் மீது கே.கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிவு விசாரிக்கின்றனா்.