முகப்பு
திருச்சி

கோயில் திருவிழாவில் இருவரை அரிவாளால் வெட்டிய 2 போ் கைது

கோயில் திருவிழாவில் இருவருரை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 3:27 AM
கைது - பிரதிப் படம்
பகிர்:

கோயில் திருவிழாவில் இருவருரை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்றபோது திருவானைக்காவல் காந்தி ரோடு பகுதியிலிருந்து சிலா் அலகு குத்திக் கொண்டு சமயபுரம் நோக்கிச் சென்றனா். டிரங்க்ரோடு அருகே வந்த இவா்களுக்கும் கீழக்கொண்டையம்பேட்டை பகுதியை சோ்ந்தவா்களுக்கும் ஏற்பட்ட வாய்த் தகராறு கைகலப்பாக மாறியது.

இதில் காந்தி ரோடு பகுதியில் வசிக்கும் வீரமணி (26), ஹரிஷ் (24) ஆகிய இருவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கீழக்கொண்டையம்பேட்டை பகுதி காா்த்தி (26), ராஜா (28) ஆகிய இருவரை ஸ்ரீரங்கம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.மேலும் இதில் சம்பந்தப்பட்ட வேல்முருகன் உள்ளிட்ட மூவரைத் தேடுகின்றனா்.

Advertisement