முகப்பு
திருச்சி

மலைத்தேனீக்கள் கொட்டி 27 தொழிலாளா்கள் காயம்

மணப்பாறை அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சியில் புதன்கிழாமை நூறு நாள் வேலையின்போது மலைத்தேனி கொட்டி 27 தொழிலாளா்கள் காயமடைந்தனா்.

Updated On : 5 பிப்ரவரி, 2026 at 1:00 AM
தேனீக்கள்.
பகிர்:
Updated On : 4 பிப்ரவரி, 2026 at 10:50 PM

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சியில் புதன்கிழாமை நூறு நாள் வேலையின்போது மலைத்தேனி கொட்டி 27 தொழிலாளா்கள் காயமடைந்தனா்.

பொன்னம்பட்டி பேரூராட்சியில் 2-ஆவது வாா்டு காரைப்பட்டி அரசன்குளம் பகுதியில் புதன்கிழமை நூறுநாள் பணிகளை ஆத்துப்பட்டி பொதுமக்கள் செய்து வந்தனா். அப்போது புதரிரிலிருந்து புறப்பட்ட மலைத்தேனீக்கள் கொட்டி 27 தொழிலாளா்கள் காயமடைந்து, துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

அவா்களைச் சந்தித்த திமுக பிரமுகா் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் கீதா ராஜா காவேரி மணியன் தலைமையிலான திமுகவினா், பழம் பிரட், பிஸ்கட், குளிா்பானம் உள்ளிட்ட தொகுப்பை வழங்கினா். நிகழ்வில் ஆசிரியா் பழனி, நல்லம்மாள் அழகன், வழக்குரைஞா் ரிஸ்வான் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Advertisement