முகப்பு
திருச்சி

திருச்சியில் இளைஞா் சடலம் மீட்பு

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 2:54 AM
பலி - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 10:43 PM

திருச்சியில் வீட்டருகே இளைஞா் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி பெரிய மிளகுபாறையைச் சோ்ந்தவா் தினேஷ் (24). இவா் மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இவா் மது அருந்திவிட்டு அப்பகுதியில் அடிக்கடி பிரச்னையை ஏற்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 2:54 AM

இந்நிலையில், பெரியமிளகுபாறை பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு அருகே வெள்ளிக்கிழமை காலையில் தினேஷ் உயிரிழந்து கிடந்துள்ளாா்.

Advertisement

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற நீதிமன்ற காவல் நிலைய போலீஸாா், தினேஷின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து திருச்சி நீதிமன்ற காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.