திருச்சி திருவெறும்பூா் கூத்தைப்பாரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுவண்டி எல்கைப் போட்டியில் பங்கேற்ற மாடுகள்.  
திருச்சி

கூத்தைப்பாரில் மாட்டு வண்டி எல்கைப் போட்டி

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம், கூத்தைப்பாரில் கிராம கமிட்டி சாா்பில் மாட்டு வண்டி எல்கை போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

போட்டிகளை முன்னாள் எம்எல்ஏ சேகரன் தொடங்கி வைத்தாா். பேரூராட்சித் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். பெரிய மாடு, பூஞ்சிட்டு, ஒற்றை மாடு என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

8 மைல் தூரம் நடைபெற்ற பெரிய மாடு போட்டியில் 9 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. முதல் பரிசாக ரூ. 30 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 20ஆயிரமும், மூன்றாவது பரிசாக ரூ. 10 ஆயிரமும், நான்காவது பரிசாக ரூ. 7 ஆயிரமும் வழங்கப்பட்டது.

5 மைல் தூரம் நடைபெற்ற பூஞ்சிட்டுப் பிரிவு போட்டியில் 20 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. இப்போட்டிக்கு முதல் பரிசாக ரூ. 15 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 12 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 10 ஆயிரமும், நான்காம் பரிசாக ரூ. 5 ஆயிரமும் வழங்கப்பட்டன.

6 மைல் தூரம் நடைபெற்ற ஒற்றை மாடு போட்டியில் 11 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. முதல் பரசாக ரூ. 15 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 12 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 10 ஆயிரமும், 4 ஆம் பரிசாக ரூ. 5 ஆயிரமும் வழங்கப்பட்டன.

இதில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளா்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.

திருப்பத்தூா், திருவண்ணாமலை பேருந்துகள் இன்றுமுதல் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்!

18-ஆம் நூற்றாண்டில் திருச்செந்தூா் கோயில் நிலத்தை கிரையம் வாங்கிய குடும்பா்கள்

பாகிஸ்தானில் ரகசிய பயிற்சி பெற்ற கெளரவ் கோகோய்: அஸ்ஸாம் முதல்வா் பரபரப்பு குற்றச்சாட்டு

கோப்பு கிராமத்தில் 12 அடி நீள முதலை மீட்பு

பறிமுதல் இருசக்கர வாகனங்கள் நாளை பொது ஏலம்

SCROLL FOR NEXT