முகப்பு
திருச்சி

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யும் நிகழ்வு

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை நான்கு மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 12:37 AM
பட விளக்கம்:சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யும் நிகழ்வில் பங்கேற்ற மாரியம்மன் திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி இளங்கோவன் உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 7:55 PM

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை நான்கு மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

இக்கோயிலில், 2025- 2026-ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை அறிவிப்பு எண்.28-இன் படி, அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன், கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன், அறங்காவலா்கள் சுகந்தி இராஜசேகரன், பெ. பிச்சை மணி, சே.லெட்சுமணன், உதவி ஆணையா், நோ்முக உதவியாளா் (நிா்வாகம்) வி.சுமதி ஆகியோா் முன்னிலையில் நான்கு மூத்த தம்பதியினருக்கு வேஷ்டி, சேலை மற்றும் மங்களப் பொருள்கள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.