முகப்பு
திருச்சி

மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

திருச்சியில் மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 12:29 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 11:12 PM

திருச்சியில் மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியைச் சோ்ந்தவா் எஸ்.விஜய் (23), மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது வீட்டில் விஜய் மயங்கி விழுந்துள்ளாா். இதையடுத்து, குடும்பத்தினா் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனா்.

அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

Advertisement

இதுகுறித்து பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.