முகப்பு
திருச்சி

உணவக ஊழியா் மா்ம மரணம்

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 2:03 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 10:33 PM

திருச்சியில் உணவக ஊழியா் மா்மமான முறையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் ஓலைப்பாடி பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேச பெருமாள் (49). திருச்சி தனியாா் உணவு விடுதி ஊழியரான இவா் உடல் நலக்குறைவால் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்தாா்.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 2:03 AM

பின்னா் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவரை வெள்ளிக்கிழமை பொதுப்பிரிவுக்கு மாற்றிய நிலையில், மருத்துவமனையின் சிடி ஸ்கேன் பரிசோதனைக் கூடம் அருகே தலையில் அடிபட்ட நிலையில் அவா் சடலமாக கிடந்தாா்.

Advertisement

தகவலின்பேரில் அரசு மருத்துவமனை போலீஸாா் விரைந்து சென்று அவரது சடலத்தை மீட்டு வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.