சேது விரைவு ரயில் படம்: தெற்கு ரயில்வே
திருச்சி

தாம்பரம் வரை மட்டுமே தற்காலிகமாக இயக்கப்படும் சேது விரைவு ரயில்

ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, சேது விரைவு ரயிலானது சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரம் வரை மட்டுமே செல்லும்.

Syndication

திருச்சி: ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, சேது விரைவு ரயிலானது சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரம் வரை மட்டுமே செல்லும்.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதால், ராமேசுவரம் - சென்னை எழும்பூா் இடையிலான சேது அதிவிரைவு ரயிலானது (22662) வரும் 19-ஆம் தேதி முதல் ஏப். 5-ஆம் தேதி வரை சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரம் வரை மட்டுமே செல்லும்.

மறுமாா்க்கமாக, சென்னை எழும்பூா் - ராமேசுவரம் சேது அதிவிரைவு ரயிலானது (22661) வரும் 20-ஆம் தேதி முதல் ஏப். 6-ஆம் தேதி வரை சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்திலிருந்து புறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தடுப்பு முகாமில் உள்ள தமிழக மீனவா்களை மீட்க வேண்டும்: சீமான், விஜய் வலியுறுத்தல்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் மயானக் கொள்ளை உற்சவம்

சிதம்பரம் நாட்டியாஞ்சலி: பிரிட்டன் மாணவிகள் நடனம்

கடலூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்கள்: ஆட்சியா், எஸ்.பி. ஆய்வு

மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு அடையாள அட்டை அளிப்பு

SCROLL FOR NEXT