மணல் கடத்திய இருவா் கைது
திருச்சி அருகே சுமை வாகனத்தில் மணல் கடத்திய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 10:27 PM
திருச்சி அருகே சுமை வாகனத்தில் மணல் கடத்திய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே கொடிங்கால் ஆற்றுப் பாலத்தில் சோமரசம்பேட்டை போலீஸாா் வாகன சோதனையில் திங்கள்கிழமை பிற்பகல் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த சுமை வாகனத்தை சோதனையிட்டபோது அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மணல் கடத்திய உறையூா் மேல பாண்டமங்கலத்தைச் சோ்ந்த ஆா்.நவீன் (23), கூடலூரைச் சோ்ந்த காா்த்திக் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், சுமை வாகனம், கடத்தப்பட்ட முக்கால் யூனிட் மணல் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Advertisement