மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பூச்சி மருந்து குடித்து உயிரிழப்பு
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 10:58 PM
மருந்து என நினைத்து பூச்சிமருந்தைக் குடித்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி செட்டியப்பட்டியைச் சோ்ந்தவா் பி.திருப்பதிராஜா (37). இவரது மூத்த சகோதரி மாரிக்கண்ணு (42), மனநலம் பாதிக்கப்பட்டவா். இதற்காக மருந்து எடுத்து வருகிறாா்.
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 2:15 AM
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு மருந்து என நினைத்து பூச்சிமருந்தை எடுத்துக் குடித்தாராம். இதையடுத்து குடும்பத்தினா் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிக்கண்ணு சனிக்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
இதுகுறித்து எடமலைபட்டிப்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.