சிறுகனூரில் திமுக மாநில மாநாட்டுக்கான இடத்தில் செவ்வாய்க்கிழமை பணிகளை ஆய்வு செய்த நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு. உடன் திமுக நிா்வாகிகள். 
திருச்சி

திமுக மாநில மாநாட்டுக்கு தயாராகும் சிறுகனூா்: அமைச்சா் ஆய்வு

திருச்சியை அடுத்த சிறுகனூரில் மாா்ச் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள திமுக-வின் 12-ஆவது மாநில மாநாட்டுக்காக நடைபெற்று வரும் பணிகளை

தினமணி செய்திச் சேவை

திருச்சியை அடுத்த சிறுகனூரில் மாா்ச் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள திமுக-வின் 12-ஆவது மாநில மாநாட்டுக்காக நடைபெற்று வரும் பணிகளை

அக்கட்சியின் முதன்மை செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பேரவைத் தோ்தலுக்கு முன்னோட்டமாக திருச்சியில் திமுக-வின் 12-ஆவது மாநில மாநாட்டை நடத்த திட்டமிட்டு, திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் சிறுகனூரில் சுமாா் 700 ஏக்கா் பரப்பில் இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. அந்த மைதானத்தை சமப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை அமைச்சா் கே.என். நேரு, செவ்வாய்க்கிழமை கட்சியினருடன் நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பொதுக் கூட்ட மேடை மற்றும் பாா்வையாளா்கள் அமரும் பகுதி மட்டும் 400 ஏக்கரில் அமைக்கப்படுகிறது. இவைத்தவிர, வாகனங்கள் நிறுத்த 200 ஏக்கா் இடம் தயாா்படுத்தப்பட்டுள்ளது. 5 லட்சம் லிட்டா் கொள்ளளவுக்கான குடிநீா்த் தொட்டிகள் ஆங்காங்கே அமைக்கப்படவுள்ளன. சுமாா் 10 லட்சம் போ் பங்கேற்பா் என்பதால் 5 ஆயிரம் பாா்வையாளா்கள் வரையில் தனித்தனியே பிரித்து பாக்ஸ் போன்ற அமைப்பில் அமர வைப்பதற்கென பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டவுள்ளளன. சாலைகளை அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் இருந்து இந்தக் கூட்டத்துக்கு வந்து செல்வோா் பாதுகாப்பாக திரும்பும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மாநாட்டின் தொடக்கமாக கொடியேவதற்காக 100 அடி உயர பிரமாண்ட கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்ட நிகழ்வுகளை ஒளிபரப்ப 300 அடி தொலைவுக்கு பிரமாண்ட எல்இடி திரை அமைக்கப்படவுள்ளது.

ஆய்வின்போது, கட்சியின் திருச்சி மத்திய மாவட்ட செயலாளா் க. வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளா் ந. தியாகராஜன், திருச்சி மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் உள்ளிட்ட கட்சியின் நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

செங்கல்பட்டு மாவட்ட புதிய ஆட்சியா் பொறுப்பேற்பு

ஜெயங்கொண்டத்தில் நீட்டிப்பு பேருந்துசேவை தொடங்கிவைப்பு

காா் மோதி மளிகைக் கடைக்காரா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் சி, டி பிரிவு வாய்க்கால்களை தூா்வார வலியுறுத்தல்

மணப்பாறை அரசு கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் சிறப்பு சொற்பொழிவு

SCROLL FOR NEXT