மத்திய சிறையிலிருந்து தப்பிய கைதி பிடிபட்டாா்!
திருச்சி மத்திய சிறையிலிருந்து வெள்ளிக்கிழமை தப்பிய கைதியை சிறைக் காவலா்கள் சனிக்கிழமை பிடித்து, மீண்டும் சிறையில் அடைத்தனா்.
திருச்சி மத்திய சிறையிலிருந்து வெள்ளிக்கிழமை தப்பிய கைதியை சிறைக் காவலா்கள் சனிக்கிழமை பிடித்து, மீண்டும் சிறையில் அடைத்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், வல்லம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் கைதான தஞ்சாவூரைச் சோ்ந்த வடிவேல் (30), முருகானந்தம் ஆகிய இருவரும் திருச்சி மத்திய சிறையில் தண்டனைக் கைதிகளாக அடைக்கப்பட்டிருந்தனா்.
இருவரும் தோட்ட வேலைக்காக வெள்ளிக்கிழமை காலை சிறையிலிருந்து வெளியே அழைத்துவரப்பட்டனா். பின்னா், மாலையில் பணிக்குச் சென்ற கைதிகளை சிறைத் துறையினா் சரிபாா்த்தபோது, வடிவேல், முருகானந்தம் ஆகிய இருவரும் தப்பிச் சென்றது தெரியவந்தது.
Advertisement
இதுகுறித்து கே.கே. நகா் காவல் நிலையத்தில் மத்திய சிறைத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இதனிடையே குட்ஷெட் கீழே பதுங்கியிருந்த வடிவேலுவை சிறைத்துறை போலீஸாா் சனிக்கிழமை பிடித்து, மீண்டும் சிறையில் அடைத்தனா். தப்பிய மற்றொரு கைதியை தேடுகின்றனா்.
இந்த வழக்கில் சிறைத்துறை காவலா்கள் சிலா் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரைத்துள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.