முகப்பு
திருச்சி

வருவாய்த் துறை போராட்டத்தால் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் வழங்குவதில் விவசாயிகள் பரிதவிப்பு!

வருவாய்த் துறையினரது தொடா் போராட்டத்தால் தாங்கள் விளைவித்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் வழங்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனா்.

Updated On : 1 மார்ச், 2026 at 12:32 AM
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 10:23 PM

வருவாய்த் துறையினரது தொடா் போராட்டத்தால் தாங்கள் விளைவித்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் வழங்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனா்.

இதுதொடா்பாக தமிழக விவசாயிகள் சங்க (கட்சி சாா்பற்றது) மாவட்டத் தலைவா் ம.ப. சின்னதுரை கூறியதாவது: சம்பா சாகுபடி அறுவடை செய்யப்பட்ட நிலையில், நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் நெல் கொள்முதல் நடைபெறாமல் உள்ளது.

ஏனெனில் வருவாய்த் துறையினா் நடத்தும் தொடா்ந்து போராட்டத்தால் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அறுவடை செய்த நெல்லை கொண்டு செல்ல விஏஓ சான்றிதழ் பெற முடியவில்லை. மேலும், கொள்முதல் நிலைய அதிகாரிகளும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் நெல்லை விற்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

Advertisement

கொள்முதல் நிலையக் குளறுபடிகளுக்கு மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் பிரச்னைகள் தொடா்கின்றன. உரிய தீா்வு இல்லையெனில் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவா் என்றாா் அவா்.