திருச்சி

அகில இந்திய தொழிலாளா்கள் முன்னேற்ற வெற்றிக் கழக தோ்தல் அறிக்கை வெளியீடு

செங்கல் தொழிலாளா்கள் நலச்சங்கத்தின் புதிய கட்சியான அகில இந்திய தொழிலாளா்கள் முன்னேற்ற வெற்றிக் கழகத்தின் அறிமுக விழா திருச்சியில் புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

செங்கல் தொழிலாளா்கள் நலச்சங்கத்தின் புதிய கட்சியான அகில இந்திய தொழிலாளா்கள் முன்னேற்ற வெற்றிக் கழகத்தின் அறிமுக விழா திருச்சியில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு நிறுவனா் தலைவா் தியாகராஜன் திருநீலகண்டா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். விழாவில், கட்சிக் கொடி அறிமுகம் செய்யப்பட்டு, 51 வாக்குறுதிகள் கொண்ட பேரவைத் தோ்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது. தோ்தல் வாக்குறுதிகள் குறித்து தியாகராஜன் திருநீலகண்டா் விளக்கினாா்.

கூட்டத்தில், மாவட்டத் தலைவா்கள் மாரியப்பன், அப்பாவு உள்ளிட்ட மாநில, மாவட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT