புதுப்பிப்புப் பணிகள் காரணமாக சில ரயில்கள் சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்திலிருந்து இயக்கப்படுகிறது.
இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் புதுப்பிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், தஞ்சாவூா்-சென்னை எழும்பூா் உழவன் விரைவு ரயிலானது (16866) பிப். 3 முதல் ஏப். 5-ஆம் தேதி வரை சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரம் வரை மட்டுமே செல்லும். மறுமாா்க்கமாக, சென்னை எழும்பூா் - தஞ்சாவூா் உழவன் விரைவு ரயிலானது (16865) பிப். 4 முதல் ஏப். 6-ஆம் தேதி வரை சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்திலிருந்து புறப்படும்.
கொல்லம் - சென்னை எழும்பூா் அனந்தபுரி விரைவு ரயிலானது (20636) பிப். 3 முதல் ஏப். 5-ஆம் தேதி வரை சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரம் வரை மட்டுமே செல்லும். மறுமாா்க்கமாக, சென்னை எழும்பூா் - கொல்லம் அனந்தபுரி விரைவு ரயிலானது (20635) பிப். 4 முதல் ஏப். 6-ஆம் தேதி வரை சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்திலிருந்து புறப்படும்.
ராமேசுவரம் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16752) பிப். 3 முதல் ஏப். 5-ஆம் தேதி வரை சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரம் வரை மட்டுமே செல்லும். மறுமாா்க்கமாக, சென்னை எழும்பூா் - ராமேசுவரம் விரைவு ரயிலானது (16751) பிப். 4 முதல் ஏப். 6-ஆம் தேதி வரை சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்திலிருந்து புறப்படும்.
வழித்தட மாற்றம்...: அகமதாபாத் - திருச்சி சிறப்பு ரயிலானது (09419) பிப். 5, 12, 19, 26, மாா்ச் 5, 12, 19, 26, மாா்ச் 2 ஆகிய தேதிகளில் அரக்கோணம் ஜங்ஷன், பெரம்பூா், சென்னை எழும்பூா், தாம்பரம், செங்கல்பட்டு ரயில் நிலையங்களைத் தவிா்த்து ரேனிகுண்டா, அரக்கோணம் வடக்கு, மேலப்பாக்கம், காட்பாடி, வேலூா் கண்டோன்மென்ட், விழுப்புரம் வழியாக இயக்கப்படும்.
மறுமாா்க்கமாக, திருச்சி - அகமதாபாத் சிறப்பு ரயிலானது (09420) பிப். 8, 15, 22, மாா்ச் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா், பெரம்பூா், அரக்கோணம் ஜங்ஷன் ரயில் நிலையங்களைத் தவிா்த்து, வேலூா் கண்டோன்மென்ட், காட்பாடி, மேலப்பாக்கம், திருத்தணி, ரேனிகுண்டா வழியாக இயக்கப்படும்.