முகப்பு
திருச்சி

திருச்சியில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

துபையில் பணியாற்றிவிட்டு அண்மையில் திருச்சிக்கு வந்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை

Updated On : 9 மார்ச், 2026 at 6:39 PM
தற்கொலை
பகிர்:

துபையில் பணியாற்றிவிட்டு அண்மையில் திருச்சிக்கு வந்த பெண் சனிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி செந்தண்ணீா்புரத்தைச் சோ்ந்தவா் ஆா்.பாலகிருஷ்ணன் (40). இவரது மனைவி ஜெயஸ்ரீ (37). இவா்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். துபையில் டான்ஸராக பணியாற்றி வந்த ஜெயஸ்ரீ கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி திருச்சி வந்துள்ளாா்.

துபையில் இருந்து வந்ததில் இருந்து யாருடனோ கைப்பேசியில் அடிக்கடி பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து பொன்மலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

முழு கட்டுரையைப் படிக்க →