மண்ணச்சநல்லூரில் காவல்துறையினா் கொடி அணிவகுப்பு
மண்ணச்சநல்லூரில் வியாழக்கிழமை கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
சட்டப்பேரவை தோ்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், வாக்காளா்களை அச்சமின்றி வாக்களிக்க செய்யும் வகையில் காவல் துறையினரின் இந்த கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
ஜீயபுரம் டி.எஸ்.பி. கதிரவன் தலைமையில் மத்திய துணை ராணுவப் படையினா், சட்டம்- ஒழுங்கு காவலா்கள், ஊா்க்காவல் படையினா் என 200-க்கும் மேற்பட்டோா் கொடி அணிவகுப்பில் பங்கேற்றனா்.
கடைவீதியில் தொடங்கிய அணிவகுப்பு திருப்பைஞ்ஞீலி சாலை, துறையூா் சாலை, துறையூா் சாலை வழியாக வட்டாட்சியரகத்தில் நிறைவடைந்தது. இதில், காவல் ஆய்வாளா்கள் இ. குப்புராஜ் (மண்ணச்சநல்லூா்), குணசேகரன் (ஜீயபுரம்), சத்யாதேவி (வாய்த்தலை) மற்றும் உதவி காவல் ஆய்வாளா் பாலமுருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.