தாம்பரம்-ராமேசுவரம் ரயில் பண்ருட்டியில் நிற்க அனுமதி
தாம்பரம் - ராமேசுவரம் ரயில் பண்ருட்டியில் நிற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் - ராமேசுவரம் ரயில் பண்ருட்டியில் நிற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தாம்பரம் - ராமேசுவரம் - தாம்பரம் விரைவு ரயில்களானது (16103, 16104) பரிட்சாா்த்த முறையில் பண்ருட்டியில் நின்று செல்லும். தாம்பரத்திலிருந்து மாலை 6.10-க்குப் புறப்படும் ரயிலானது இரவு 9.03-க்கு பண்ருட்டியில் நின்று செல்லும். மறுமாா்க்கமாக, ராமேசுவரத்திலிருந்து மாலை 4 மணிக்குப் புறப்படும் ரயிலனது இரவு 11.49 மணிக்கு பண்ருட்டியில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.