லால்குடி அரசுக் கல்லூரியில் நுண்கலை மன்ற விழா
லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுண்கலை மன்ற விழா மற்றும் விளையாட்டு விழா ஆகிய இருபெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுண்கலை மன்ற விழா மற்றும் விளையாட்டு விழா ஆகிய இருபெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி முதல்வா் த. ஜெயக்குமாா் தலைமை வகித்து, பரிசுகளை வழங்கினாா்.
நுண்கலை மன்ற விழா ஆண்டறிக்கையை கலை பண்பாட்டு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் துறை பேராசிரியருமான ராஜா வாசித்தாா். தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரியின் முதல்வா் து. ரோசி சிறப்புரையாற்றி, கலைப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கி பேசுகையில், நாம் இளம் வயதிலேயே சில கலைகளை கற்க வேண்டும். கலை நமக்கு வழிகாட்டும். கலை நம்மை வாழ வைக்கும். கலை அறிவைப் பெருக்கும். கலைகளோடு நாம் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். கலைகளோடு நூல்களையும் படிக்க வேண்டும். அறச் செயல்களையும் செய்ய வேண்டும் என்று பேசினாா்.
முன்னதாக, தமிழ்த் துறைத் தலைவா் மஞ்சுளாதேவி வரவேற்றாா். பேராசிரியா் அசோக் நன்றி கூறினாா்.