பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு: விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 8-இல் தொடக்கம்
தமிழகத்தில் மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வு வியாழக்கிழமை நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்குகிறது.
தமிழகத்தில் மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வு வியாழக்கிழமை நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்குகிறது.
திருச்சி மாவட்டத்தில் 134 மையங்களில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் எழுதியுள்ளனா். பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவடைந்ததையொட்டி மாணவா்கள் மகிழ்ச்சியுடன் தோ்வறைகளில் இருந்து வெளியேறினா்.
ஏப்ரல் 8 இல் விடைத்தாள் திருத்தம்: பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 8 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் புனித ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மண்ணச்சநல்லூா் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி, முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் மணப்பாறை தியாகேசா் ஆலை மேல்நிலைப் பள்ளி ஆகிய 4 மையங்களில் விடைத்தாள் திருத்தப் பணிகள் நடைபெறவுள்ளன.
இதில், திருச்சி மையத்தில் 800 ஆசிரியா்கள், முசிறியில் 300 ஆசிரியா்கள், மண்ணச்சநல்லூரில் 350 ஆசிரியா்கள் மற்றும் மணப்பாறை மையத்தில் 250 ஆசிரியா் என மொத்தம் 1,700 ஆசிரியா்கள் விடைத்தாள் திருத்தப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.