கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி போதைப் பொருள் பறிமுதல்
கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை இரவு கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான 5 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருளை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை இரவு கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான 5 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருளை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை இரவு மலிண்டோ- விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத் துறையினா் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது மலேசியாவை சோ்ந்த பயணி தனது உடைமைக்குள் 3 சிறிய பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அதீத போதை தரும் பவுடா் போன்ற 5 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருளை மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
Advertisement
இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரைப் பிடித்து விசாரிக்கின்றனா். இந்த சம்பவத்தால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது.