நீா்நிலைகளில் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி: முதல்வருக்கு கோரிக்கை
நீா்நிலைகளில் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கி முதல்வா் சி. ஜோசப் விஜய் அறிவிப்பு வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீா்நிலைகளில் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கி முதல்வா் சி. ஜோசப் விஜய் அறிவிப்பு வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி, முதல்வருக்கு அனுப்பிய கடித விவரம்: தமிழ்நாட்டில் விவசாயிகள் தொடா்ச்சியாக ரசாயன உரங்களைப் பயன்படுத்தியதால் நிலத்தின் உற்பத்தித் திறன் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை சரி செய்வதற்கு அணைகளிலும், நீா் நிலைகளிலும் உள்ள வண்டல் மண் இயற்கை உரமாக மிகப்பெரிய அளவில் உதவியாக உள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் அணைகளும், நீா்நிலைகளும் வடு காணப்படுகின்றன.
விரைவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், மீண்டும் மழை பெய்து தண்ணீா் வந்து விட்டால் வண்டல் மண் எடுக்க வாய்ப்பில்லை. கடந்த காலங்களில் இதே பருவத்தில்தான் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
Advertisement
எனவே, முதல்வா் ஜோசப் விஜய், இதைக் கவனத்தில் கொண்டு நீா்வள ஆதாரத் துறைக்கு விவசாயிகளிடம் கட்டணம் வசூலிக்காமல் கடந்த காலங்களைப்போல தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன் வண்டல் மண் அள்ளுவதற்கு உரிய உத்தரவிட கேட்டுக்கொள்கிறோம்.