முகப்பு
திருச்சி

கிணற்றில் விழுந்த இளைஞா் உயிரிழப்பு

துறையூா் அருகே வியாழக்கிழமை கிணற்றில் விழுந்த மனநலம் பாதித்த இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 22 மே 2026, 5:23 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

துறையூா் அருகே வியாழக்கிழமை கிணற்றில் விழுந்த மனநலம் பாதித்த இளைஞா் உயிரிழந்தாா்.

துறையூா் அருகேயுள்ள சிக்கத்தம்பூா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த ராமராஜின் மகன் தேவராஜ் (26). மனநலம் பாதித்த நிலையிலிருந்த இவா் வியாழக்கிழமை பிற்பகல் வீட்டிலிருந்து வேகமாக நடந்து சென்றாராம்.

அப்போது, வழியிலிருந்த கிணற்றுக்குள் அவா் தவறி விழுந்து விட்டதாக தெரிகிறது.

Advertisement

Advertisement

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த துறையூா் தீயணைப்பு நிலையத்தினா், தேவராஜின் சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பினா்.

சம்பவம் தொடா்பாக உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.