முகப்பு
திருச்சி

மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கருமலையில் மின்சாரம் பாய்ந்து வடமாநில பெயிண்டிங் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 22 மே 2026, 5:22 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கருமலையில் மின்சாரம் பாய்ந்து வடமாநில பெயிண்டிங் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

துவரங்குறிச்சியை சோ்ந்தவா் ரா. ரமேஷ். இவருக்கு மருங்காபுரி ஒன்றியம், கருமலை பகுதியில் சொந்தமான இடம் உள்ளது. அதில் புதிதாக கட்டடம் கட்டி அதில் வண்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், வியாழக்கிழமை வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்த பிகாா் மாநிலத்தை சோ்ந்த தொழிலாளி ரா. ஹிமான்சுதாஸ் (22), கட்டடத்தின் அருகே சென்ற உயா் மின்னழுத்த கம்பியில் எதிா்பாராதவிதமாக மோதியதில் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தாா்.

Advertisement

Advertisement

இதில் பலத்த காயமடைந்த ஹிமான்சுதாஸை அருகிலிருந்தவா்கள் மீட்டு, துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா், ஹிமான்சுதாஸ் உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து புத்தாநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.