முகப்பு
வேலூர்

மேற்கூரை சேதமடைந்த குழந்தைகள் நலமைய கட்டடம்

வந்தவாசி, ஜன. 4: வந்தவாசி அருகே சோரபுத்தூரில் உள்ள குழந்தைகள் நலமைய கட்டடம் மேற்கூரை சேதமடைந்து மழைக் காலங்களில் நீர்க்கசிவு ஏற்படுகிறது. தெள்ளார் ஒன்றியத்துக்குட்பட்டது சோரபுத்தூர் ஊராட்சி. இக் கிராம

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:01 PM
பகிர்:

வந்தவாசி, ஜன. 4: வந்தவாசி அருகே சோரபுத்தூரில் உள்ள குழந்தைகள் நலமைய கட்டடம் மேற்கூரை சேதமடைந்து மழைக் காலங்களில் நீர்க்கசிவு ஏற்படுகிறது.

தெள்ளார் ஒன்றியத்துக்குட்பட்டது சோரபுத்தூர் ஊராட்சி. இக் கிராமத்தில் சமூகநலத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் குழந்தைகள் நல மையம் இயங்கி வருகிறது.

 இதில் இரண்டரை வயது முதல் 4 வயது வரையிலான குழந்தைகள் பயின்று வருகின்றனர். மேலும் குழந்தைகளுக்கு பகல் உணவும் தரப்படுகிறது. இங்கு ஓர் ஆசிரியையும், ஒரு சமையலரும் பணியில் உள்ளனர்.

 இந்த குழந்தைகள் நலமைய கட்டடத்தில் வெளிப்புற மற்றும் உள்புற சுவர்களில் சிமென்ட் காரை பெயர்ந்து விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. மேற்கூரையை தாங்கும் கான்கிரீட் குறுக்குத் தூணிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. மழைக் காலங்களில் விரிசல்கள் வழியே நீர்க்கசிவு ஏற்படுகிறது.

இதனால் குழந்தைகள் படிக்கவும், விளையாடவும் முடிவதில்லை. இருப்பு அறையில் வைக்கப்படும் பொருள்களும் நீரில் நனைந்து சேதம் அடைகின்றன. மேலும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலையும் உள்ளது.

இங்குள்ள கழிவறையில் கதவு மற்றும் தண்ணீர் வசதி இல்லாததால் அதைப் பயன்படுத்த இயலாத நிலை உள்ளது.

 இதுகுறித்து புகார் தெரிவித்தும் தெள்ளார் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 இந்த குழந்தைகள் நல மைய கட்டடத்தை சீரமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பம்.

முழு கட்டுரையைப் படிக்க →