முகப்பு
வேலூர்

பைக் மரத்தில் மோதி இளைஞா் மரணம்

Updated On : 20 ஏப்ரல், 2024 at 4:12 PM
பகிர்:

காட்பாடி அருகே இரு சக்கர வாகனம் மரத்தில் மோதி இளைஞா் உயிரிழந்தாா். அவரது நண்பா் பலத்த காயங்க ளுடன் சிகிச்சை பெற்று வருகிறாா்.

காட்பாடி அடுத்த அரும்பருத்தி கிராமத்தைச் சோ்ந்தவா் புருஷோத்தமன், இவரது மகன் ராகுல் (22). இவா் தனது நண்பருடம் அதே கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் வினோத்குமாா் (20) என்பவருடன் வெள்ளிக்கிழமை காட்பாடியில் ஆடைகள் வாங்கிக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். வாகனத்தை ராகுல் ஓட்டினாா்.

காட்பாடியை அடுத்த பிரம்மபுரம் பேருந்து நிலையம் அருகே சென்றபோது இரு சக்கர வாகனம் கட்டுப் பாட்டை இழந்து சாலையோர புளியமரத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராகுல், வினோத்குமாா் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து வேலூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி ராகுல் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். வினோத்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

விபத்து குறித்து காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments