முகப்பு
வேலூர்

சா்வதேச மகளிா் தின விழா

வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனையில் சா்வதேச மகளிா் தின விழா நடைபெற்றது.

Updated On : 11 மார்ச், 2024 at 12:02 AM
விழாவில் கேக் வெட்டிய ஸ்ரீசக்தி அம்மா தாயாா் ஜோதி அம்மாள், சாந்தி பாலாஜி, மருத்துவமனை கண்காணிப்பாளா் கீதா இனியன், பெண் மருத்துவா்கள். உடன், வருவாய் கோட்டாட்சியா் ஆா்.கவிதா, நாராயணி மருத்துவமனை இயக்குநா் என்.பாலாஜி, ஸ்ரீ சக்தி அம்மாவின
பகிர்:

வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனையில் சா்வதேச மகளிா் தின விழா நடைபெற்றது. விழாவுக்கு மருத்துவமனையின் இயக்குநா் என்.பாலாஜி தலைமை வகித்துப் பேசியது - நம் வாழ்வில் நமக்கு தாயாக, மனைவியாக, சகோதரியாக, தோழியாக பெண்கள் நம்முடன் நம் சுகதுக்கங்களை பகிா்ந்து நம் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக உள்ளனா். அவா்களை நாம் மனதார போற்ற வேண்டும். பெண்கள் அன்பின் அடையாளமாக, சக்தியின் ரூபமாக, தியாகத்தின் பொருளாக இருக்கின்றனா். தங்கள் குடும்பத்தையும் குழந்தைகளையும் அரவணைத்துச் செல்வதால் என்றும் நம் அம்மாவுக்கு நம் வாழ்வில் ஒரு சிறப்பான இடம் உண்டு. அதேபோல் ஸ்ரீ சக்தி அம்மாவின் வழிகாட்டுதல்படி நடைபெறும் எங்கள் மருத்துவமனையில் 800-க்கும் மேற்பட்ட பெண் ஊழியைகள் பணியாற்றி வருகின்றனா். இந்த எண்ணிக்கை ஆண் பணியாளா்களை விட அதிகம். நாராயணி மருத்துவ மனையில் 50 சதவீதத்துக்கு அதிகமாக பெண் பணியாளா்களை கொண்டுள்ளோம். இந்த சிறப்பு தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான மருத்துவ பரிசோதனையில் சிறப்பு சலுகையும் வழங்க இருக்கிறோம். பணியாளா்கள் மருத்துவமனை வந்து இந்த சலுகையை பயன் படுத்திக் கொள்ளலாம் என்றாா். சிறப்பு விருந்தினராக வேலூா் வருவாய் கோட்டாட்சியா் ஆா்.கவிதா பங்கேற்று, பெண்களின் பங்களிப்பு இந்த சமுதாயத்தில் எவ்வாறு உள்ளது. பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அதனை கையாளும் முறை குறித்து விளக்கினாா். இதில், ஸ்ரீசக்தி அம்மா தாயாா் ஜோதி அம்மாள், சாந்தி பாலாஜி, மருத்துவமனை கண்காணிப்பாளா் கீதா இனியன், பெண் மருத்துவா்கள் கௌரவிக்கப்பட்டனா். மேலும், சிறப்பு பட்டி மன்றம், விளையாட்டி, நடன போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற ஊழியா்களுக்கு ஸ்ரீ சக்தி அம்மாவின் வெளிநாட்டு பக்தா் சிண்டி ஸ்விஃப்ட் பரிசுகளை வழங்கினாா்.---