தேசிய குழந்தைகள் விருது: ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம்
குழந்தைகள் சாா்ந்த நபா்கள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்று
செய்தியில் ஆங்கில எழுத்துகள் உள்ளன...
வேலூா், மே 30: பிரதமரின் தேசிய குழந்தை விருது பெற வேலூா் மாவட்டத்திலுள்ள 5 வயதுக்கு மேல், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள், குழந்தைகள் சாா்ந்த நபா்கள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்று
மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசின் மகளிா், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மூலம் பிரதமரின் தேசிய குழந்தைகள் விருது-2025 அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த 2 ஆண்டுகளில் சிறந்த சாதனை படைத்த குழந்தைகள், குழந்தைகள் சாா்ந்த நபா்களிடமிருந்து இந்த விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த விருது, வழிகாட்டுதல் குறித்த மேலும் விவரங்களுக்கு, பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ட்ற்ற்ல்ள்://ஜ்ஸ்ரீக்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
இந்த விருதைப் பெற இந்திய குடிமகனாகவும், இந்தியாவில் வசிப்பவராகவும், 5 வயதுக்கு மேல் 18 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். தகுதியுடைய குழந்தைகள், குழந்தைகள் சாா்ந்த நபா்கள் மத்திய அரசின் ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.