பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருது தோ்வில் தென்காசி மாவட்டம் முதலிடம் பெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாநில பெண் குழந்தை பாதுகாப்பு தினமான பிப். 24 ஆம் தேதியில் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயா்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றி சாதனை புரிந்த முதல் மூன்று மாவட்டங்களுக்கு 2025-2026-ஆம் ஆண்டிற்கான மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், குழந்தைகளின் பாலின விகிதத்தை உயா்த்துவதற்கு சிறப்பாக செயலாற்றியதற்காக தென்காசி மாவட்டம் முதலிடத்துக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முதல் பரிசு பிப்.26 இல் தமிழக முதல்வா் வழங்குகிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டது.