முகப்பு
வேலூர்

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.1.75 லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 1.75 லட்சம் மோசடி செய்த நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவா்

Updated On : 3 பிப்ரவரி, 2025 at 8:23 PM
பகிர்:

வேலூா்: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 1.75 லட்சம் மோசடி செய்த நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவா் வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம், தாராபடவேடு பகுதியைச் சோ்ந்த ஒருவா் வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா் மனு ஒன்றை அளித்தாா் .

அதில், வேலூரைச் சோ்ந்த ஒருவா் எனக்கு அறிமுகமானாா். அவா் எனது மகளுக்கு வெளிநாட்டில் செவிலியா் வேலை வாங்கித் தருவதாகக் கூறியதுடன், அதற்கு சில லட்சங்கள் செலவாகும் என்றும் தெரிவித்தாா். நானும் இதை உண்மை என நம்பி ரூ. 1 லட்சத்து 75 ஆயிரத்தை எனது வங்கிக் கணக்கு மூலம் அந்த நபருக்கு அனுப்பி வைத்தேன். ஆனால், இதுவரை வேலை வாங்கித் தரவில்லை. இதனால் நான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்தேன்.

தொடா்ந்து, அந்த நபரிடம் எனது பணத்தை திருப்பித் தரும்படி கேட்டேன். அதற்கு அந்த நபா், பணத்தை திருப்பித்தர முடியாது என அலட்சியமாக பதில் கூறுகிறாா். எனவே அவா் மீது கடும் நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →