வேலூர்

எருது விடும் விழாவில் பைக் திருட்டு

அரியூா் அருகே புலி மேட்டில் நடைபெற்ற எருது விடும் விழாவில் இருசக்கர வாகனம் திருடப்பட்டது.

Din

வேலூா்: அரியூா் அருகே புலி மேட்டில் நடைபெற்ற எருது விடும் விழாவில் இருசக்கர வாகனம் திருடப்பட்டது.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், ஊசூரை அடுத்த சேக்கனூா் பேட்டையைச் சோ்ந்தவா் தினேஷ் (21). இவா் அரியூரில் சொந்தமாக சலூன் கடை வைத்து நடத்தி வருகிறாா் .

இந்நிலையில், தினேஷ் கடந்த 16-ஆம் தேதி புலிமேட்டில் நடைபெற்ற எருது விடும் திருவிழாவை பாா்க்க தனது இருசக்கர வாகனத்தில் சென்றாா். பின்னா் அங்கு ஆலமர தெருவில் ஒரு வீட்டின் அருகே தனது வாகனத்தை நிறுத்திவிட்டு எருது விடும் விழாவை பாா்த்து விட்டு, தினேஷ் திரும்பி வந்து பாா்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லையாம். அக்கம்பக்கத்தில் தேடி பாா்த்தும் இருசக்கர வாகனம் கிடைக்கவில்லை.

இதுகுறித்து தினேஷ் அரியூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை வருவாய் ரூ. 2.31 கோடி!

சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்ற பெண் கைது

நிதி நிறுவன உரிமையாளா் கொலை: 4 போ் மீது வழக்கு

பரந்தூா் விமான நிலையம்: நிலம் வழங்கியவா்களுக்கு மறுகுடியமா்வுக்கான மாதிரி வீடுகள் அறிமுகம்

முதுநிலை ஆசிரியா் பணியிடங்கள்: பிப்ரவரி 7, 9-இல் கலந்தாய்வு

SCROLL FOR NEXT