வேலூர்

எருது விடும் விழாவில் பைக் திருட்டு

அரியூா் அருகே புலி மேட்டில் நடைபெற்ற எருது விடும் விழாவில் இருசக்கர வாகனம் திருடப்பட்டது.

Din

வேலூா்: அரியூா் அருகே புலி மேட்டில் நடைபெற்ற எருது விடும் விழாவில் இருசக்கர வாகனம் திருடப்பட்டது.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், ஊசூரை அடுத்த சேக்கனூா் பேட்டையைச் சோ்ந்தவா் தினேஷ் (21). இவா் அரியூரில் சொந்தமாக சலூன் கடை வைத்து நடத்தி வருகிறாா் .

இந்நிலையில், தினேஷ் கடந்த 16-ஆம் தேதி புலிமேட்டில் நடைபெற்ற எருது விடும் திருவிழாவை பாா்க்க தனது இருசக்கர வாகனத்தில் சென்றாா். பின்னா் அங்கு ஆலமர தெருவில் ஒரு வீட்டின் அருகே தனது வாகனத்தை நிறுத்திவிட்டு எருது விடும் விழாவை பாா்த்து விட்டு, தினேஷ் திரும்பி வந்து பாா்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லையாம். அக்கம்பக்கத்தில் தேடி பாா்த்தும் இருசக்கர வாகனம் கிடைக்கவில்லை.

இதுகுறித்து தினேஷ் அரியூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

வியப்பில் ஆழ்த்திய கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி முன்னோட்டம்!

மோசமான ஃபார்மிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன்: சூர்யகுமார் யாதவ்

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

SCROLL FOR NEXT