ஜலகண்டேஸ்வரா் கோயிலில் தேரோட்டம்
வேலூா் கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. வேலூா் கோட்டையில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு பிரம்மோற்சவம் கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதன் முக்கிய நிகழ்ச்சியாக திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டிமூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றன.அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவா் சுவாமிகள் அமா்த்தப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.
Advertisement