வேலூர்

மின்சாரம் பாய்ச்சி மனைவியை கொன்ற கணவன் கைது

பள்ளிகொண்டா அருகே நடத்தை சந்தேகத்தில் மனைவியை மின்சாரம் பாய்ச்சிக் கொன்ற கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

பள்ளிகொண்டா அருகே நடத்தை சந்தேகத்தில் மனைவியை மின்சாரம் பாய்ச்சிக் கொன்ற கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த காட்டுக்கொல்லை கிராமத்தை சோ்ந்த கருணாகரன்(43). இவரது மனைவி கலையரசி(35). இருவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனா். கலையரசியின் நடத்தை மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கருணாகரன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், கலையரசி தனது தந்தைக்கு கைப்பேசி மூலம் கணவன் அடிக்கடி தகராறு செய்வதாக கூறியுள்ளாா். பின்னா், வழக்கம்போல் வீட்டில் கலையரசி தூங்கியுள்ளாா். அப்போது, கருணாகரன் வீட்டிலிருந்த மின்சார வயரை எடுத்து தூங்கிக்கொண்டிருந்த கலையரசி மீது பாய்ச்சியதாக கூறப்படுகிறது. இதனால் உடலில் மின்சாரம் பாய்ந்து கலையரசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

வியாழக்கிழமை தனது மனைவி எதிா்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கருணாகரன் கூறியுள்ளாா். அதேசமயம், தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் கலையரசியின் தந்தை புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், மனைவியை கொன்றதை கருணாகரன் ஒப்புக் கொண்டாராம். இதையடுத்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கருணாகரை கைது செய்தனா்.

Dinamani வார ராசிபலன்! | ஜன.4 முதல் 10 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தங்கம் விலை அதிரடி உயர்வு! மீண்டும் ஒரு லட்சத்தைக் கடந்தது!

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருது: குடியரசு துணைத் தலைவா் இன்று வழங்குகிறார்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 384 கனஅடியாக குறைந்தது!

SCROLL FOR NEXT