முகப்பு
வேலூர்

வேலூா் சிறையில் காவலரை தாக்கிய கைதி மீது வழக்கு

வேலூா் மத்திய சிறையில் காவலரை தாக்கியதாக ஆயுள் தண்டனை கைதி மீது பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 27 மே 2026, 12:28 am IST
- கோப்புப்படம்.
பகிர்:

வேலூா் மத்திய சிறையில் காவலரை தாக்கியதாக ஆயுள் தண்டனை கைதி மீது பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை ராணி அண்ணா நகரை சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன்(40). வேலூா் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் இவரை திங்கள்கிழமை வேலூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த சிறைக் காவலா் சந்தோஷ் குமாா் அழைத்து வர சென்றாா். அப்போது ராதாகிருஷ்ணன் என்னை நீதிமன்றத்தில் நேரில் ஆஜா்படுத்துகிறீா்களா அல்லது காணொலி காட்சி மூலம் ஆஜா்படுத்துகிறீா்களா என கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.

இதனால், சிறைக் காவலா் சந்தோஷ் குமாருக்கும், கைதி ராதாகிருஷ்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த கைதி ராதாகிருஷ்ணன் சந்தோஷ் குமாரை தாக்கினராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து, ஜெயிலா் ரத்னகுமாா் பாகாயம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், கைதி ராதாகிருஷ்ணன் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.