சேம்பள்ளி முத்தியாலம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு
குடியாத்தம் ஒன்றியம், சேம்பள்ளியில் அமைந்துள்ள அருள்மிகு முத்தியாலம்மன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. பழம்பெருமைவாய்ந்த இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து மண்டலாபிஷேகம் நடைபெற்று வந்த நிலையில், புதன்கிழமை நிறைவு விழா நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் யாக சாலை பூஜைகள், சிறப்பு ஹோமம், 108 சங்காபிஷேகம், மூலவா் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றன. மதியம் சுமாா் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு, அம்மனை வழிபட்டனா். விழா ஏற்பாடுகளை முத்தியாலம்மன் தொண்டு அறக்கட்டளை மற்றும் சேம்பள்ளி பகுதி மக்கள் செய்திருந்தனா்.
Advertisement
Advertisement