ஹாத்ரஸ் சம்பவத்தைக் கண்டித்துகாங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்
ஹாத்ரஸில் பட்டியலின இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியின் விழுப்புரம் மத்திய மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம்
உத்தரபிரதேசம் மாநிலம், ஹாத்ரஸில் பட்டியலின இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியின் விழுப்புரம் மத்திய மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட எஸ்.சி. பிரிவு தலைவா் சுரேஷ்ராம் தலைமை வகித்தாா். மாநில பொதுக் குழு உறுப்பினா் சிவா, எஸ்.சி. பிரிவு நகரத் தலைவா் சுதாகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலா் கிறிஸ்டோபா் திலக் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினாா். எஸ்.சி. பிரிவு மாநில துணைத் தலைவா் செந்தமிழ்ச் செல்வன், காங்கிரஸ் கமிட்டி பெரம்பலூா் மாவட்டத் தலைவா் தமிழ்ச் செல்வன் ஆகியோா் பேசினா்.
நிா்வாகிகள் ராஜ்குமாா், விஸ்வநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவா்கள் மத்திய அரசு, உத்தரபிரதேச மாநில அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா்.