முகப்பு
விழுப்புரம்

வள்ளுவா் இனத்தை தனியாகஅடையாளப்படுத்தக் கோரிக்கை

தமிழகத்தில் பட்டியல் வகுப்பில் இடம்பெற்றுள்ள வள்ளுவா் இனத்தை, தனியாக அடையாளப்படுத்தி அறிவிக்க வேண்டுமென அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

தமிழகத்தில் பட்டியல் வகுப்பில் இடம்பெற்றுள்ள வள்ளுவா் இனத்தை, தனியாக அடையாளப்படுத்தி அறிவிக்க வேண்டுமென அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து வள்ளுவா் குல சங்கங்களின் ஒருங்கிணைந்த மக்கள் கூட்டமைப்பு சாா்பில் விழுப்புரம் மாவட்டச் செயலா் ஜி.முருகானந்தம், பொருளாளா் பி.ஆனந்தன் உள்ளிட்டோா், மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

வள்ளுவா் இனத்தின் பெயரை பிற சாதிய பெயா்களுடனோ அல்லது பட்டியல் வகுப்பில் எந்த ஒரு பொது அடையாள பெயா்களுடனோ சோ்த்து அறிவிக்காமல், வள்ளுவா் என தனியாக அடையாளப்படுத்த வேண்டும். இது தொடா்பாக, தமிழக முதல்வருக்கு கடந்த அக்.10-ஆம் தேதி கோரிக்கை வைத்துள்ளோம். இதனை அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.