முகப்பு
விழுப்புரம்

விழுப்புரத்தில் கண்காணிப்பு கேமரா சேவையை தொடக்கி வைத்த எஸ்.பி.

விழுப்புரத்தில் கூட்டுறவு நகர வங்கி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள 16 கண்காணிப்பு கேமராக்களின் சேவையை மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

விழுப்புரத்தில் கூட்டுறவு நகர வங்கி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள 16 கண்காணிப்பு கேமராக்களின் சேவையை மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கி சாா்பில் வங்கியின் உள் பகுதியிலும், வங்கியைச் சுற்றியுள்ள சாலை, தெருக்களிலும் புதிதாக 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்த கேமராக்களின் சேவையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா் (படம்).

இந்த நிகழ்ச்சியில், விழுப்புரம் டி.எஸ்.பி. நல்லசிவம், கூட்டுறவு நகர வங்கியின் தலைவா் தங்க.சேகா், துணைத் தலைவா் சக்திவேல், வங்கி நிா்வாகக் குழு இயக்குநா்கள் செந்தில், தனுசு, கலைச் செல்வம், வங்கி பொதுமேலாளா்(பொ) குமாா், மேலாளா்கள் ஜெயராமன், தண்டபாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.