முகப்பு
விழுப்புரம்

காா் திருட்டு: இளைஞா் கைது

Updated On : 12 ஏப்ரல், 2024 at 6:51 PM
பகிர்:

விழுப்புரம், ஏப் .12: திண்டிவனம் அருகே மெக்கானிக் கடையில் நிறுத்தப்பட்டிருந்த காரை திருடியதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டிவனம், கல்லூரி சாலை, கலைஞா் நகரைச் சோ்ந்தவா் வீராசாமி மகன் பிரகாஷ்(34). இவா், திண்டிவனம் சந்தைமேடு பகுதியில் மெக்கானிக் கடை வைத்துள்ளாா். வியாழக்கிழமை இரவு வழக்கம்போல் பணிமுடிந்து தனது பேட்டரி காரை கடை முன் நிறுத்தி வைத்துவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை கடைக்கு வந்து பாா்த்தபோது காா் திருட்டுப் போனது தெரியவந்தது.

இது குறித்து ரோஷணை காவல் நிலையத்தில் பிரகாஷ் புகாா் தெரிவித்தாா். பின்னா் போலீஸாா் நடத்திய விசாரணையில் திண்டிவனம் வட்டம், முருங்கப்பாக்கம், காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ரமணன் மகன் குணசேகரன்(24) காரைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து குணசேகரனை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா். அவரிடமிருந்து பேட்டரி காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments